இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
300
- ஒருவன் : லாபமா? நஷ்டமா?-நைனா
- லாபமா? நஷ்டமா?
- ராசாங்கம் நம்ம கையில் வந்ததாலே
- நாட்டிலுள்ள மக்களுக்கு நம்மளாலே- (லாபமா)
- சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்சமரம்
- ஆளுமேலே சாஞ்சுதுனா ஆபத்து-அவன்
- ஆவியது போகுமிண்ணு யூகிச்சு-நல்லா
- வேரைக் கெல்லி மரத்தையெல்லாம்
- வெட்டித் தள்ளி காயவச்சு
- வித்து விடச் சொல்லி விட்டேன் காசுக்கு
- வெறகு பஞ்சம் தீர நம்முடைய ஊருக்கு
- நைனா-லாபமா?-நஷ்டமா?
- இதனால்-லாபமா?-நஷ்டமா!
- மற்றொருவன் : பழங் கொடுத்துப் பலன் கொடுக்கும்.
- பல மரமும் போனா
- நிழலும் ஏது பணமும் ஏது
- லாபமேது நைனா!
- ஒருவன் : சத்திரங்கள் இருப்பதாலே தண்ட சோத்து சாமிகளே
- ஜாஸ்தியாகிப் போச்சு நம்ப நாட்டிலே-அதுக
- சஞ்சரிக்க வேண்டியது காட்டிலே-அதனால்
- இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சு தள்ள
- உத்தரவு போட்டு விட்டேன் நேருலே-எனைப் போல்
- புத்திசாலி யாரு இந்த ஊரிலே?