பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300


ஒருவன் : லாபமா? நஷ்டமா?-நைனா
லாபமா? நஷ்டமா?
ராசாங்கம் நம்ம கையில் வந்ததாலே
நாட்டிலுள்ள மக்களுக்கு நம்மளாலே- (லாபமா)
சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்சமரம்
ஆளுமேலே சாஞ்சுதுனா ஆபத்து-அவன்
ஆவியது போகுமிண்ணு யூகிச்சு-நல்லா
வேரைக் கெல்லி மரத்தையெல்லாம்
வெட்டித் தள்ளி காயவச்சு
வித்து விடச் சொல்லி விட்டேன் காசுக்கு
வெறகு பஞ்சம் தீர நம்முடைய ஊருக்கு
நைனா-லாபமா?-நஷ்டமா?
இதனால்-லாபமா?-நஷ்டமா!


மற்றொருவன் : பழங் கொடுத்துப் பலன் கொடுக்கும்.
பல மரமும் போனா
நிழலும் ஏது பணமும் ஏது
லாபமேது நைனா!


ஒருவன் : சத்திரங்கள் இருப்பதாலே தண்ட சோத்து சாமிகளே
ஜாஸ்தியாகிப் போச்சு நம்ப நாட்டிலே-அதுக
சஞ்சரிக்க வேண்டியது காட்டிலே-அதனால்
இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சு தள்ள
உத்தரவு போட்டு விட்டேன் நேருலே-எனைப் போல்
புத்திசாலி யாரு இந்த ஊரிலே?