பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.4 அகத்தினைக் கொள்கைகள் இல்-வீடு, வல்லே-விரைவ. க. நல்லைமன்-நீ மிகவும் நல்லவள்: த கூ உ - நசாநின்று: பெயர்ந்தோள் - புறம் போயினள்) . தன் மகளது கரந்த ஒழுக்கத்தை நேரில் கண்ட நிலையிலும் இவள் மகளைக் கடியாது நல்லைமன் என்கின்றாள். செய்தது, நகைத்து அகன்றது. இவ்வளவே அங்கு நிகழ்ந்தது. இங்குத் தாயர் தக்கது என்ன நகை என்பதைப் பேராசிரியர் இது பிறர் எள்ளியது பொருளாகத் தன்கண் நகை பிறந்தது. என்னை? தன் மகள் தன்னை மதியாது இகழ்ந்தாள் என நக்கவாறு. இது வெகுளிப் பொருளாக நக்கதன்றோ எனின், அது வீரர்க்கே உரித்தாதல் வேண்டும். இவள் அவளை வெகுண்டு தண்டம் செய்வாள் அல்லள். அதற்கே உவப்பின் அல்லது என்பது' என்று மெய்ப் பாட்டியலில் விளக்குவர். ஈண்டு நற்றாயின் பெருந்தன்மை புலனாகின்றதைக் காண்க. கடுஞ்சொல் அன்னை என்று தன் மகள் தனக்கிட்டுள்ள பெயர்க்குரிய செயலைக் காட்டாத உண்மையிலேயே நற்றாயாதலை’க் கண்டு மகிழ்க. { தலைவின் ஈன்ற தாய் நற்றாயாய் இருத்தலுக்கு வேறு كې சான்றுகளும் உள்ளன. தலைவன் தலைவியைப் புணர்ந்து உடன் போக்கில் சென்றபின் தோழியின் அறத்தொடு நிற்றலால் உண்மையை அறிகின்றாள். அறிந்தவள் கூறுவது: தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிது.ஆம் கொல்லோ? தனக்கே பனிவரை இனக்களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே' iஅமர் பெரிதும் விரும்பும்; ஆயம்-தோழியர் கூட்டம்; தனக்கே - அவளுக்கு; இனக்-களிறு - பிடியும் கன்றும்; வயக்குறு-வெற்றி தரும்; அவன் புணர்ந்து-நம்பியுடன் கூடி - இதில் நற்றாய், 'நம்மகள் கற்புக்கடம் பூண்டமையை முன்னமே அறிவித்திருந்தால் யாமே வரைவு எதிர்கொண்டு ஈண்டு நம் இல்லத்திலேயே வதுவை நிகழ்விப்போமே. அங்கன்ம் நிகழ்ந்திருந் தால் அவட்கும் இன்பம், அவள்பால் அன்புடைய ஆயமகளிர்க்கும் 18. மெய்ப்-3 (எள்ளல் இளமை என்பதில்) 19. ஐங்குறு-379