இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் கருணானந்தம்
113
அண்ணாவின் தொடக்க வரிகள் சிலவற்றையும், முடிவு வரிகள் சிலவற்றையும், அக்கருத்தை வைத்து நான் வெண்பாத்தளையில் எழுதிய வரிகள் சிலவற்றையும் இங்கு பார்ப்போமா?
- சின்னாட்களுக்கு முன்பு நான்
- சிரிப்பைக் கிளறிடும் படமென
- செப்பினர் நண்பர்கள் என்பதால்
- சென்றேன் கண்டிட ஆங்கிலப் படமதை.
- சிந்தனை தன்னைக் கிளறியதப்படம்
- சிரிக்கவும் வைத்தது என்னை மெத்தவும்.
- ஆங்கிலப் படமது: ஆகவே அதிலே
- ஆங்கில வாழ்க்கை முறை இருந்தது.
- -இது அண்ணா.
- ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப்
- பாங்குடன் கண்டு பரிந்துரைத்தார் நண்பர்,
- விருப்போடு வேண்டியதால் சின்னாள்முன் சென்றேன்.
- சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய்
- நேர்ந்தது, மேனாட்டார்.நேர்த்திமிகு வாழ்வுரைக்கத்
- தேர்ந்த சிறந்த கதை; சீராம் கருத்துக்கள்.
- -இது நான்.
- பணம் படுத்தும் பாடுதனை உணர்த்திடவும்
- பணம் தேடும் அரிப்பினால் ஏற்பட்டுவிடும்
- பாழ்நிலையை, விபத்ன்த் விளக்கிடவே
- படம் மெத்தத் தர்மரக்ப் புலன் அளித்திடவே
- பார்த்ததில் சிரித்து மகிழ்ந்ததுடன்
- சிந்தைக்கு விருந்து பெற
- வழி இருந்திடக் கண்டு
- மகிழ்ந்திருந்தேன் நானே!
- -இது அண்ணா.
அ.-8