பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அருணகிரிநாதர் 'ஏ(ேmங்கல் சாய்ச் ான்சமன் m கோளகம் ஏருே 6յ (Լք85 தத நானமூ 鬍器 1257 சாகர மேழுங் கிரியேழும்...காய கதிர்வேல் டிை 681 ஏழ்கடல், எழுவரை துகளெழ வடித்தவேல்-டிெ 842 'மலையேழு துண்டாய் எழுவர் சோரிகொண் டாறு வர வேலெறிந்தே நடனமுங் கொள்வேலா'-டிை 374 (387, 613, 725, 819, 1008, 10:19, 1145, 1162-எண் ணுள்ள திருப்புகழ்ப் பாக்களையும் பார்க்க) செய்யுள் 33. (முடியா) : இது முருகபிரானது நாம பஜனை விசேடத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் அருமைப் பாடல். கந்தரந்தாதி 30 (தெய்வ)-செய்யுளும், திருப்புகழ் 668 - வதன. சரோருக என்னும் பாடலும் இக் கருத்துக் கொண்டன. செய்யுள் 37. (கண்டுண்ட) : ரா வுத் த ன்-வேடிச்சி காவலன் வகுப்பு-அடி 22-குறிப்பைப் பார்க்க: செய்யுள் 38. (நாளென்) : இது வேயுறு தோளி பங்கன்’ என்னும் தேவாரம் போன்ற கோளறு பாடல். கந்தரந்தாதி 48 சேயவன்' என்னும் பாடலுடன் (பக்கம் 154) இதுவும் அவசியம் மனப்பாடஞ் செய்யப்பட வேண் டிய மந்திரப் பாவாகும். ஆபத்து வேளைகளிற் பெரிதும் உதவும் பெருமை வாய்ந்த பாட்டு இது. செய்யுள் 40. (சேல்பட்) கால்பட் டழிந்தது-கந்தரர் தாதி 71-ஆம் பாடற் குறிப்பைப் பார்க்க. பக்கம் (155) செய்யுள் 41, (பாலே): இப்பாட்டின் மூன்ரும் அடி யில் காலே மிகவுண்டு காலே யிலாத கணபணம்’ (கால்= வாயு: கணபணம்=ஆதிசேடன்-பாம்பு) இதன் சொல் லின்பமும் பொருளின்பமும் மகிழத் தக்கன. செய்யுள் 44. (தோலால்) : அப்பர் சுவாமிகள் 'கால்கொடுத் தெலும்புமூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தோலுடுத் துதிரம் அட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை என்ருர். (Iv-67-3-திருக்கொண் டீச்சரம்)