பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


அதற்காக, இப்பொழுதிருந்தே கவ்வுதல், பிடித்தல், கடித் தல், துரத்துதல் போன்ற காரியங்களில் பயிற்சி பெறுகின்றன. இப்பொழுது இரண்டு குட்டிகளும் விளையாடிக் கொண்டிருக் கின்றன. இந்த விளையாட்டுப் பயிற்சிதான் வாழ்க்கைக்கு உதவும் செயல்களாக மாறுகின்றன என்றார் அவர்.

அப்பாவின் விளக்கம் புரிந்தது. ஆமாம்! நாய்க்குட்டிகள் கடித்துக் கொள்கின்றன. காயம் இல்லை. தாக்கிக் கொள் கின்றன. வேகம் இல்லை. அடித்துக் கட்டிப் புரள்கின்றன. ஆத்திரம் இல்லை. விளையாடி மகிழ்கின்றன அவை!

விளையாட்டானது ஒருவரை வாழ்க்கைக்குத் தயார் செய்கிறது. ஆமாம் விளையாட்டுதான் மனிதர்களை மனிதர் களாக வாழவைக்கிறது. வாழவைக்கும் பயிற்சியைத் தருகிறது. வாழ்வின் உண்மையைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.

தென் அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினரான சிவர பிந்திய மக்களில் ஒரு வகையினர், தங்களது குழந்தைகளை ஒன்று திரட்டி, அவர்களை இரண்டு குழுவாகப் பிரித்துக் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்களாம்.

ஒரு குழுவினர் கையில் வில்லும், விரைந்துபோகின்ற விறைப்போடு, குத்தினால் காயப்படுத்தாத வைக்கோலால் செய்த அம்புகளும் இருக்க, மற்ற குழுவினர் அதுபோலவே ஆயுதத்தாங்கி ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்வார் களாம்.

குறிப்பாக 'அம்பெய்வதுதான் நோக்கம். இடுப்பிற்குக் கீழே அம்பு பட்டுவிட்டால், அப்படி அம்பு பட்டவர்கள் கீழே விழுந்து விடுவார்கள். அவ்வாறு தங்கள் மீது அம்பு விழாமல், மற்றவர்கள் மீது குறியுடன் அம்பினை எய்ய முயல் வார்கள்.