பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


மழையும் வெயிலும், பனியும் குளிரும் அவனுக்கு புரியாத புதிச்களாய் இருந்தது போலவே, உணவக்காக அலைந்த விலங்குகளின் வேட்டைக்களமாக அவனது வாழ்க்கை அமைந்தபோது, பயஉணர்வு காரணமாக அவன் மரப்பொந்து களிலும் புதர்களிலும், மரக்கிளைகளிலும் பதுங்கித் தன்னைக் காத்துக் கொண்டான்.

ஆதிகால மனித வாழ்க்கை, அயராத அழியாதப் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. அதாவது, வெறிகொண் டலைந்து விலங்கினத்திலிருந்து, தங்களைக் காத்துக் கொள்கின்ற விவேகமில்லாத நடைமுறைகளிலே தான். அன்றைய மனிதன் வாழ்ந்து வந்திருக்கிறான்.

மாறிவந்த காலங்கள், மனிதனது அறியாமையையும் மாற்றிக் கொண்டே வந்து, அறிவு பூர்வமான அனுபவங் களையும் அவ்வப்போது அளித்துக் கொண்டே வந்தன.

தாவிப்பாய்ந்த மிருகங்களிட மிருந்து தப்பித்துக் கொள்ள அன்றைய மனிதர்கள் ஓடினர்கள். அப்பொழுது தப்பித்துக் கொண்ட அனுபவத்தால், தங்கள் சந்ததியினரையும் தயார் செய்து கொள்ள முனைந்த பழக்கமே, கூட்டமாக ஒடிப் பழகிய வழக்கமே, இந்நாளைய ஒட்டப் பந்தயங்களாக மாறி வந்திருக்கின்றன.

தப்பி ஒடிய காலத்தில் பள்ளங்களையும், மேடுகளையும், குழிகளையும், நீர்ப்பகுதியையும் தாண்டிக் குதித்த பழக்கமே தாண்டும் போட்டிகளாக உருமாறி வந்திருக்கின்றன.

ஓடவும் தாண்டவும் முடியாமல்,' கிட்டத்திலே' சிக்கிக் கொண்ட பொழுது, கல்லெறிந்து, கம்புகளை வீசித் தப்பிக்க முயன்று. பின்னர் குறிபர்த்து வீசிய முறைகளே, இன்று எறியும் போட்டிகளாக ஆகியிருக்கின்றன.