பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எட்வர்டு கார்ப்பென்டர்

காதல்

காதலே! உன்னைச் சிறப்பித்துக் கவிஞர் செய்யுள் செய்வர்.

உனக்கு ஆயர்கள் ஆனந்தமாய்க் குழல் ஊதுவர்; உனக்காகக் கன்னியர் தம் தனிமாடங்களில் பெருமூச்செறிவர்.

தலைமுறை தலைமுறையாய்ப் பாடகர்கள் உன்னைப் பாடிக்கொண்டே இருப்பர்.

உலக முழுவதும் உன் புகழ் ஒலிக்கும், நானும் சில உரைப்பேன்.

நீ அழகாயிருக்கிறாய் என்பதற்காக அன்று ;

உன் கண்கள் வெற்றியொளி வீசுவதற்காக அன்று, உன் பார்வையின் சூழ்ச்சிக்காகவும் அன்று;

92