பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாலுமியின் மனைவி

I

ஆம், அந்தச் செய்தி உண்மையென்று,

உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா ?

அவர் சுகமா யிருக்கிறா ரென்று -

உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா ?

வேலையைப் பற்றி நினைக்க இதுவா நேரம் ?

இராட்டினத்தைத் தூக்கித் தூர வையுங்கள் -

கோலின் என் கணவர் வந்துவிட்டார் !

நூல் நூற்க இதுவா நேரம் ?

அங்கியைக் கொடுங்கள், கடற்கரை போவேன்,

அவர் கரையில் இறங்குவதைப் பார்ப்பேன்!

அவர் இல்லாத பொழுது

வீட்டில் அழகில்லை,

அதிர்ஷ்டமில்லை, ஆனந்தமு மில்லை !

II

என் சிறு தொப்பியைக் கொடு,

என் சரிகைக் கவுணைக் கொடு,

கோலின் வந்த சுப செய்தியைத்

தோழிகளுக்குச் சொல்ல வேண்டாமா ?

ஆம், அந்தத் துருக்கிச் செருப்பும் -

அந்த நீல மேல்ஜோடும் வேண்டியதே.

என்னை நாடி வருகிறார்,

என்னை நேசிக்கிறார் அல்லவா ?

எல்லாம் அவருக்கு ஆனந்தம் அளிக்கவே !

27