இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நள்ளிரவில்
I
இரண்டு எளிய சிறுமிகள் -
- இன்னும் குழந்தைகளே அவர்கள்
நள்ளிரவில் - நடு வீதிகளில்
- பாடித் திரிந்தனர்.
II
கந்தல் உடை - கதிர் வீசும் கண்கள் -
- நாணப் பார்வை - கோத்த கைகள்
திரண்ட கன்னங்கள் - சாய்த்த தலைகள் -
- பாடித் திரிந்தனர்.
III
கடவுளே அவர்கள் பாடித்திரிந்தனர்
- தங்கள் மழலைக் குழவிக் குரலில்!
தேவ கீதம் - காதல் கீதம்
- பாடித் திரிந்தனர்.
IV
சத்தமே அறியாத சதுக்கத்தில், ஆரு மில்லாத நெடுந் தெருவில்,
- மாலையில் வீடுவரும் மாணவிகள் போல்
பாடித் திரிந்தனர்.
64