பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்கள் பலர் - அவர்களோ சிலர்!

அடர்த்த நிசப்த அரணியத்தைப் போல்,
அமைதியாய் உறுதியாய் நில்லுங்கள்
கைகளைக் கட்டிக் கொள்ளுங்கள்,
கண்கள் தோல்வியறியாக் கணைகளா யிருக்கட்டும்.

II


கொடுங்கோலர் துணிந்தால்
குதிரைகளை ஓட்டி வரட்டும்!
குத்தட்டும், வெட்டட்டும், அறையட்டும், அரியட்டும்;
இஷ்டம்போல் செய்ய இடங் கொடுத்து விடுங்கள்!

III


கோபம் தணியுமட்டும் கொல்லட்டும்!
மடக்கிய கைகளோடும், மருளாத கண்களோடும்
அச்சமும் ஆச்சரியமும் அகற்றி
அவைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள்!

ᏮᏮ