இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எழுந்திடுக!
I
முதலாளி - தொழிலாளியின் இரத்தம் கொண்டு
இரத்தினம் உண்டாக்குகிறான்.
நிலச்சுவான்-விவசாயியின் வாழ்நாளைப்
பாழாக்குகிறான்.
அரசன் - வறிஞரை நுகத்தில் மாட்டுகிறான்.
அட்டூழியத்தில் ஆழ்ந்த ஜனங்களோ -
தூங்குகின்றனர்.
II
ஆசாரியர் மேடைமீது நிற்கிறார்,
மகன் பாடசாலையில் படிக்கிறான்.
ஒருவர் வயோதிகக் காலத்தில் முட்டாள்.
மற்றவனோ ? இளமையில் கிழவன் !
73