பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



74 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


டிருந்தவர்களிலே ஒருவராக வாழ்ந்தவர்தான் மாமேதை ஐன்ஸ்டைன் என்றால் மிகையாகா.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விஞ்ஞானக் கருத்துக்களையும், அதன் ஆராய்ச்சிகளையும் மட்டுமே சிந்தித்த சிந்தனைச் சிற்பியல்ல. மக்களது வாழ்வியலையும் அவர் தெளிவாகச் சிந்தித்தவர்.

எளிமையான வாழ்வே எல்லோருக்கும் ஏற்றது, தகுந்தது என்று அவர் எண்ணியவர் மட்டுமல்ல, மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையினையே தனக்குரிய பாடமாக ஏற்றுக்கொண்டு, காந்தியடிகளைப் போலவே, எளிமையாகவும், சாந்தமாகவும், கருணையாளராகவும், பழக இனிமையாளராகவும், விடாமுயற்சி உடையவராகவும், வாழ்ந்து காட்டிய மனித குல மாமேதையாக விளங்கியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,

அறிவியல் உலகின் பொதுச் சொத்து, அது நாட்டின் எல்லைகளைக் கடந்தது; அனைவரும் அந்த அற்புதங்களை அனுபவிக்கும் உரிமையுடையவர்கள் என்ற எண்ணம் கோண்டவராகவே வாழ்ந்து காட்டியவர் ஐன்ஸ்டைன்.

அணு சக்திகளை அவனியின் நன்மைகளுக்கே பயன்படுத்த வேண்டுமே தவிர, தன் நலத்துக்காக, அதைப் பயன்படுத்துபவன் மனித இனத்திலே சேர்க்கப்படாத ஒரு மிருகத்துக்குச் சமமானவன் என்று வெளிப்படையாக அறிவித்து, அழிவு சக்திகளுக்கும், நாச வேலைகளுக்கும் அணுச் சக்திகளைப் பயன்படுத்தும் மனிதனையும், நாட்டையும் கண்டித்தவர் ஐன்ஸ்டைன்.

அறிவியல் இந்த உலகத்தின் அதிசயங்களைத் தோற்றுவிக்கும் அதியற்புதத் துறை, இத்துறையின் விநோதங்களை, ஆராய்ச்சிகளை, மக்கள் சமுதாயத்துக்கே பயன்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.