பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஆழ்கடலில்



நகையாடும். எனவே, மானம் விரும்பும் அரசன், நல்லற நெறிகளைத் தான் கடைப்பிடிப்பதோடு நாட்டிலும் நிலை நாட்ட வேண்டும்.

இங்கே ஒரு கதை நினைவிற்கு வருகிறது; இரண்டு நாட்டு முதல் அமைச்சர்கள் ஓரிடத்தே எதிர்ப்பட்டனராம். ஒருவர் மற்றவரிடம், "எங்கள் நாட்டில் மருத்துவ மனைகளும், நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் வேலையின்றிக் கிடக்கின்றன" என்றாராம். அதாவது அவர் நாட்டில் நோயாளிகளோ குற்றவாளிகளோ இல்லை என்பது பொருள். இதனைக் கேட்ட அடுத்த அமைச்சர், "எங்கள் நாட்டில் மருத்துவ மனையோ - சிறைச்சாலையோ இல்லவே யில்லை" என்று அவரிடம் சொன்னாராம். இதுதான் 'அல்லவை நீங்குதல்’ என்பது.

அடுத்தது மறனிழுக்கா மானம் உடைமையாகும்; அதாவது வீரங்குன்றாத மானம், வீரங்குன்றினால் மானம் போயிற்றுத்தானே! இந்த மானம் இருபதாம் நூற்றாண்டில் மருந்துக்கும் கிடையாது. வெற்றிகரமாகப் பின்வாங்குங் காலமாயிற்றே இது! கீழே விழுந்தாலும் மீசையில் மண் படாத காலமாயிற்றே இது! ஆனால் அக்காலத் தமிழ் மன்னர்கள் இந்த மானமே உருவானவர்கள். போரிலே, குழந்தைகள், கிழவர்கள், பெண்கள், பேடிகள் மற்றும் கையாலாகாதவர்கள் யாரையும் கொன்றதில்லை. புற முதுகிட்டு ஓடினும், புறமுதுகிட்டு ஒடுபவன்மேல் அம்பு போடினும் மானம் போனதாகக் கருதினார்கள். புறநானூறு போன்ற இலக்கியங்களுள் புகுந்து பார்த்தால் இந்த மானமுடைமை விளங்கும். ஒரு பிணக்குக் காரணமாக, கோப்பெருஞ் சோழன் என்னும் சோழமன்னன் உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தான். கரிகாலனால் தன் மார்பிலே எய்யப்பட்ட அம்பு முதுகுவரையும் துளைத்துக்