பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பெருந்தமிழர

          "அவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை; சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின்,நான் சென்று பார்க்கலா மென்று ஒரு நாள் (21-10-1880) புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை. அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் காலேஜில் இருப்பதையும் மடத்தில் படித்தவனென்பதையும் சொன்னேன். அவர் யாரோ அயலாரிடம் பராமுக மாகப் பேசுவது போலவே பேசினர். என்ளனோடு மிக்க விருப்பத்துடன் பேசுவதாகப் புலப்படவில்லை. அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறா ர்தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார் ? என்று நான் எண்ணலானேன்.
நீங்கள் யாரிடம் பாடம் கேட்டிர்கள் ?' என்று அவர் கேட்டார்.

": மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன், என்றேன்.

  • பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக் காக என்னை மதிக்காவிட்டாலும், பிள்ளையவர்கள் மாணாக்கனென்ற முறையிலாவது என்னிடம் மனம் கலந்து பேசலாமே ; அவர் இப்படிப் பேச முன் வரவில்லை. கணக்காகவே பேசினர்.

பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடை .பெயர்சியே இல்லாத இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம் பொய்யாய் இருக்கும் என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன்.