பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்மை யான நகங்களோடு கொடிய பற்கள் இருப்பினும், சோர்ந்து கீழே வீழ வைப்பேன். சொல்லி விட்டே செய்கிறேன் என்று கூறிச் சிங்கங் தன்னை எதிர்த்து மூக்குக் காதினுள் சென்று மென்மைப் பகுதி யாவும் கன்கு கொட்ட லானது. கொட்டும் வலியைத் தாங் கிடாமல் கோபம் கொண்ட சிங்கமும் எட்டுத் திக்கும் கிடுகி டுக்க இரைச்சல் போட லானது. தேனி சிறிதும் அஞ்சி டாமல் திரும்பத் திரும்பக் கொட்டவே, மேனி கடுங்கி, மூளை கலங்கி வீழ்ந்த தந்தச் சிங்கமே! சிங்க ராஜன் தன்னை வென்ற செருக்கி குேடு தேனியும் அங்கு மிங்கும் மகிழ்ச்சி யோடு ஆடிப் பாடித் திரிந்தது. $7