பக்கம்:உத்தரகாண்டம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268   ✲   உத்தரகாண்டம்


அவள் அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். உலகில் எத்தனை விதமான துன்பங்கள்! தலைமுறைகள் தாருமாறாக வளர்ந்திருக்கின்றனவா? சாலையில் போகும் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்துக் கொலை செய்துவிட்டு அந்தப் பழியை ஒரு ஏழையின் தலையில் சுமத்திப் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் தலைமுறை. ஆட்சிக்காரர்களின் அக்கிரமங்களைப் புரிந்து கொண்டு, உரிமைகளுக்குப் போராட இந்த ஏழைகளுக்கு விழிப்பூட்டுவது பற்றிப் பேசுகிறார்கள். வழக்கமாக நடக்கும் கட்சிக் கூட்டங்களில், ஆனால் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் மேடை போட்டுப் பேசும் போது இந்தச் சொற்கள் செவியைப் பிளக்கும். இங்கேயும் கூட நாலைந்து ஆண்டுகள் எதிரே மைதானத்தில், ஜனவரி ஒன்றாந்தேதிக்கு முந்தையராவில் ‘கலை இரவு’ என்று நாடகங்கள், பேச்சு பட்டிமன்றம் என்று நடத்தினார்கள். இவளும் பார்த்திருக்கிறாள். தப்பட்டையைத் தட்டிக் கொண்டு சட்டையின் மேல் இடுப்பிலும் தலையிலும் சிவப்புத் துணியைச் சுற்றிக் கொண்டு பாடுவார்கள். நடிக நடிகையர் பேரைச் சொல்லி, அவருக்குப் பொண்ணு பிறந்தா கொண்டாட்டம், இவங்களுக்குப் பொண்ணு புறந்தா கோலாகலம். ஆனா குடிசையிலே குப்பாயிக்குப் பொண்ணு புறந்தா கள்ளிப் பாலும் நெல்லுமணியுமா?ன்னு கேப்பாருக. ஏழையின் முன் கடவுள் ரொட்டி ரூபத்தில தான் வருவாருன்னாரு காந்தி. எங்க கட்சியே ‘பிரியாணி’ப் பொட்டலத்தாலதா வளருது’ம்பான். ஆனால் இந்த நாடகங்கள் நடக்கும்போதே அக்கிரமங்கள் நடக்கும். விழிப்புணர்வு வந்ததாக இவளுக்குத் தெரியவில்லை. இப்படி நாடகம் போட்டு, மக்கள் விழிப்புணர்வு கொண்டு, ஆதிக்கக்காரர்களை எதிர்க்க மக்கள் கிளம்பி விடுவார்களோ என்றுதான் குத்தினார்களா?...

அந்தக் காட்சியைப் பற்றிக் கற்பனை செய்தாலே உடல் சிலிர்க்கிறது. துவளுகிறது. சங்கிரியைக் குலைத்துக் கொலை செய்த பாதகம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/270&oldid=1050306" இலிருந்து மீள்விக்கப்பட்டது