பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

———————— 82


படைப்பனைத்திலும்
எங்கும் எதிலும்
எப்போதும்
நீக்கமற நிறைந்திருக்கும்
பிதா மூர்த்தியான
பெரும் பேரிறைவனை
ஏனையோருடன் கூடி
ஏளனப்படுத்தி
'இல்லை’ ஆக்க முயல்வதும்
எதிர்வாதம் செய்வதும்
துரோகம் நிறைந்த
துஷ்டத்தனம் அல்லவா!


ஏ... விஞ்ஞானப் பையா...!
நீ
இந்த
வைய நெடும்புவியை
வளமாக்கலாம்!
வாழ்க்கையின்
பகட்டு வசதிகள் ஆயிரம்
படைத்துத் தரலாம்!


ஏன் –
‘சாவை’க்கூட