பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வயிறு பெருத்தது. பிறகு வயிறு கிழிந்தது. சிறுவன் ஒருவனும் பிறந்தான். அவனே சந்திரன்.

பூமியின் வயிறு கிழிவானேன்? இதைச் சிறிது விளக்கமாகக் கவனிப்போம்.

கிராமங்களிலே பெண்கள் ஆற்றிலே குளிக்கச்செல்வார்கள். குளித்துவிட்டு வரும் போது தண்ணீர் கொண்டு வருவார்கள். சிலர் குடங்களிலே தண்ணீர் கொண்டு வருவார்கள். வேறு சிலர், வாய் அகன்ற அண்டாக்களிலே கொண்டு வருவார்கள். அப்போது பெண்களின் நடைக்கு ஏற்ப அண்டா நீரில் அலை மோதும். வேகமாக நடந்தால் அலையும் வேகமாக மோதும். மெதுவாக நடந்தால் அலையும் குறையும். பெண்கள் கடக்க நடக்க அண்டாவில் உள்ள நீர் தாளம் போட்டுக்கொண்டே இருக்கும். பெண்கள் காலடி எடுத்து வைப்பதற்கு தக்க படி தாளமும் இருக்கும். காலடியோ கால அளவோடு இருக்கும்.

பெண்கள் ஓர் அடி எடுத்து வைப்பதற்கு ஒரு விநாடியாகிறது என்று வைத்துக்கொள்வோம். அண்டாவில் உள்ள நீரும் விநாடிக்கு ஒரு தாளம் வீதம் போடும்.