பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

நீங்கள் வாழை மரத்தைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுகிறீர்கள். வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு, கிழங்கு, பட்டை, நார் எல்லாம் உங்களுக்கு உபயோகப்படுவதால்தானே அப்படிச் சொல்லுகிறீர்கள்? நான்கூடத்தான் வாழையைப் போல் பலவிதத்திலும் உதவி வருகிறேன்.

பாலைவனத்தில் சாமான் தூக்கவும்,சவாரி செய்யவும் என்னைத்தான் அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.என் பாலைக் கறந்து குடிக்கிறார்கள். அதிலே பாலடைக் கட்டி செய்து, பல நாள் கெடாமல் வைத்திருக்கிறார்கள். என் உரோமத்தில் கயிறு திரிக்கிறார்கள். துணி  Invalid template invocation→நெய்-