இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61
“அம்மா, அம்மா, அதோ பாரம்மா. கழு தை மேலே கறுப்புக் கறுப்பாய்க் கோடு போட்டிருக்கு!” என்று ஒரு குரல் கேட்டது.
மிருகக் காட்சி சாலையில் வேலிக்குள் நின்று கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு சிறுவனும் அவன் அம்மாவும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
“இது கழுதை இல்லேடா கண்ணு. உடம்பைப் பார். எப்படிப் பளபளப்பாக இருக்கிறது. இந்த மிருகக் காட்சி சாலையிலே புலிக்கு அடுத்தபடி அழகானமிருகம் இதுதான். இதன் பெயர்தான் வரிக் குதிரை!” என்றாள் அம்மா.