இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. கைத்தொழில்
கைத்தொழில் கற்றிட வேண்டும்-அதை
நித்தமும் போற்றிட வேண்டும்.
கைத்தொழில் இல்லாத நாடு-புலி
கரடிகள் வாழ்கின்ற காடு.
மெத்தவும் சுற்றிடல் ஏனோ?-உயர்
மெத்தையில் தூங்கிடத் தானோ?
எத்துணைப் பேர்கல்வி கற்றார் :- இங்கே
என்ன நம் நாட்டினர் பெற்றார் !
பட்டங்கள் பெற்றிடப் போவார் - சிறு
பாயும் முனைந்திட லாகார்.
சின்னஞ், சிறுவரே, நீரும் - அவர்
செல்வழி| போகாதீர் வாரும்.
25