இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
32. என் விருப்பம்
காலையில் எழுவேன்; கடவுளைத் தொழுவேன்;
கருத்துடன் படிப்பேனே ;
வேலைகள் என்றன் பெற்றோர் இடுமுன்
விருப்புடன் புரிவேனே. 1
கூழே எனினும் குறைகூ றாமல்
களிப்புடன் உண்பேனே :
ஏழை எளியோர் ஏக்கம் கண்டால்
இன்புடன் தீர்ப்பேனே. 2
பொன்னே தரினும் பொய்பே சாமல்
புகழே பெறுவேனே ;
என்னால் ஆகா தென்றே எதற்கும்
ஏங்கித் தளரேனே. 3
கல்விச் சாலை சென்றே கற்கக்
காலந் தவறேனே;
சொல்லும் பாடம் யாவும் கேட்டே
சொகுசாய்க் கற்பேனே. 4
வயதில் பெரியோர் வருதல் கண்டால்
வணக்கம் புரிவேனே ;
நயமே பேசி நன்மை நாடி
நலமாய் வாழ்வேனே.5