பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


வேறு எவ்வித உணர்ச்சியையும் அவர் காட்டாமல் அமைதியாக இதைச் செய்ததால் சபையோரின் சிரிப்பு அடங்க வெகு நேர மாயிற்று. மனோகரன் நாடகத்தில் வசந்தனாக அவர் நடிப்பார். “கல்லாசனத்தின் கீழே உட்கார்ந்து, முதுகு வளைந்து போய் விட்டது” என்று வசந்தன் சொல்லும்போது உண்மையாகவே முதுகு வளைந்து போனதுபோல் நடித்துக் காட்டுவார். அவர் உடம்பு, சொல்லுகிறபடி யெல்லாம் வளையும்.

பாயாசமும் பார்த்த சாரதியும்

துரைக்கண்ணு என்று மற்றொரு இளம் ஹாஸ்ய நடிகர் இருந்தார். அவர் கதரின் வெற்றியில் வேலையாளாக நடிப்பார். அவரைப் ‘பாயாசம்’ என்றே சபையோர் குறிப்பிடுவார்கள். பாயாசப் பைத்தியம் பிடித்த வேலைக்காரனாக அவர் நடிப்பதை மக்கள் பெருமகிழ்வோடு பாராட்டுவார்கள் எந்த நாடகத்தில், என்ன வேடத்தில், அவர் வந்தாலும் ஜனங்களில் சிலர் ‘பாயாசம், பாயாசம்’ என்று அவருக்குப் பட்டம் சூட்டிக் கூப்பிடுவது வழக்கம்.

மற்றொரு நடிகர் பார்த்தசாரதி. இவர் பெண் வேடம் பூண்டு நடிப்பவர். பெரும்பாலும் சோகச் சுவைப் பாத்திரங்களிலே தோன்றித் திறமையாக நடிக்கக் கூடியவர்.மனோஹரனில் பத்மாவதியாக நடிப்பார். பார்த்தசாரதி பிற்காலத்தில் பல அரசியல் கட்சிகளிலும் பத்திரிக்கைத் துறையிலும் இருந்தபோது பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இப்போது இவர் திராவிட முன் னேற்றக்கழகத்தில் இருந்து வருகிறார்.

பாவலரின் சந்தேகம்

தந்தையார் விடுமுறைக் கேட்டது முதல் பாவலருக்கு எங்கள் மேல் சந்தேகம் உண்டாகிவிட்டது. எங்களோடு ஒட்டுக் குடித்தனத்திலிருந்த சிலரிடம் நாங்கள் திடீரென்று எங்காவது புறப்பட்டால் உடனே தகவல் கொடுக்கும்படியாக ரகசியமாகச் சொல்லிவைத்தார். இது தந்தையாருக்குத் தெரிந்துவிட்டது. அந்த வீடு வசதியில்லையென்றும் வேறு வீடு பார்க்கவேண்டு மென்றும் தந்தையார் எல்லோருடைய காதிலும் விழும்படியாக