பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


னார். அதன் பிறகு கரூரில் ஒருமுறை நான் அவரை கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருடன் சந்தித்தபோது மேனகா படத் தைப் பிரமாதமாகப் பாராட்டினார். அவரோடு எனக்கு ஏற்கனவே பழக்கமிருந்ததால் அவரது வேண்டுகோளின்படி நான் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரைமணி நேரம் பாரதி பாடல்களையும், ஜீவானந்தம் பாடல்களையும் பாடினேன். நான் பாடிக்கொண்டிருக்கும்போதே நேரு வந்துவிட்டார். அவரோடு திருமதி கமலா நேருவும் செல்வி இந்திராவும் வந்தனார். அதன் பிறகும் சில நிமிடங்கள் பாடும்படி சத்திய மூர்த்தி ஆணையிட்டார். நான் பாடிக் கொண்டிருக்கும் போதே எங்கள் நாடகக் குழுவின் சிறப்பையும் எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்கள், தேசீய நாடகங்கள் ஆகியவற்றைப்பற்றியும் நேருஜியிடம் சத்தியமூர்த்தி வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். காலஞ்சென்ற தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் பெருங் குணத்தைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன். நான் பாடி முடித்ததும் நேரு என்னை யழைத்து அருகிருத்திப் பாராட்டினார். என் உள்ளமெல்லாம் பூரித்தது.

பாலாமணி படம்

இம்முறை படத்தில் கிடைக்கும் வருவாய் முழுவதையும் கம்பெனிக்குக் காட்சிகள், உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட முடிவு செய்தோம். அதற்கு வசதியாகக் கம்பெனியை எட்டைய புரம் கொண்டு சென்றோம். இளைய ராஜா அவர்களின் சொந் தக் கொட்டகையில் சாமான்களையெல்லாம் போட்டு விட்டு, வேண்டிய ஏற்பாடுகள் செய்தோம்.

சிறுவர்களை மட்டும் அவரவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். காட்சி அமைப்பாளர்கள் கொட்டகையி லேயே இருந்தார்கள். கணக்குப் பிள்ளை தர்மராஜு மேற்பார்வையாளராக இருந்து, எல்லாவற்றையும் கவனித்துக் கொண் டார். பெரிய நடிகர்கள் சிலர், படத்தில் நடிப்பதற்காக எங்க ளோடு வந்தார்கள். இவர்களில் எஸ். வி. சகஸ்ரநாமம், பிரண்டு ராமசாமி, டி.என். சிவதாணு,டி.பி சங்கரநாராயணன் ஆகியோரும் இருந்தனார்.