பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

401


“மெதுவா...மெதுவா” என்பேன். பாலை வாங்கிக் கொண்டு மேலே வருவாள்.

‘மெதுவாப் போகக் கூடாதா? ஏன் இப்படி ஒடினே?’ என்று வாய்விட்டுச் சிரிப்பேன் நான்.

அவள் செல்லமாக ஒரக்கண்ணால் என்னைப் பார்த்து, ‘ஊம் சிளிப்பு வேறே” என்பாள். படுத்திருந்த தன்னை உரிமையோடு முதுகில் தட்டி எழுப்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு. அந்தச் செல்லக் கோபத்தையும், ‘சிளிப்பு’ என்று அவள் சொல்லும் அழகையும் ரசிப்பதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி.

மனையாளின் மனக்குறை

மீனாட்சியம்மன் கோயில், மாரியம்மன் தெப்பக்குளம், திரு மலை நாயகர் மகால், திருப்பரங்குன்றம், அழகர் கோயில் இங்கெல்லாம் என்னோடு தனியாக வந்து பார்க்கவேண்டு மென்பது அவள் ஆசை..எங்கள் திருமணம் நடந்த அன்று மாலை, இராமநாதபுரம் மன்னார் மாளிகைக்கு எதிரேயுள்ள மாரியம்மன் தெப்பக் குளத்தில் நானும் என் மனைவியும் படகில் ஏறி உலா வந்தோம். அப்போது அவள் தமக்கையும் மற்றுஞ் சில பெண்களும் படகில் இருந்தனார். ‘அதைப்போல் ஒருமுறை நாமிருவரும் தனியே அங்கு சென்று படகிலேறி மைய மண்டபம் பார்த்து வரலாம்’ என்றாள் என் மனைவி. ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய நாடகங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அக்காளோடு போய்வரச் சொல்வேன் எப்போதும் செல்லமாகச் சிணுங்குவாள். நான் பல்வேறுபட்ட பாத்திரங்களை நாடகங்களிலும் நாவல்களிலும் பார்த்தும் படித்தும் அறிந்தவன் தான். என்ன செய்வது? நாடக வேலைகளில் எனக்கிருந்த அன்றைய ஆர்வத்திற்கு முன் மனையாளின் இந்த ஆசைக் கோரிக்கைகள் முதன்மையாகத் தோன்றவில்லை. அதுவே அவளுக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது. வெளியே எங்கு போவதான லும் கணவன் தன்னோடு வரவில்லையே என்று அவள் கொஞ்சம் வேதனைப்பட்டாள். இரவு நேரங்களில் இதற்கெல்லாம் ஏதாவது சமாதானம் கூறுவேன் நான்.