பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

413


காந்தா நெ. 1-க்கும் காந்தா நெ. 2-க்கும் நடக்கும் தீவிரப் போராட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளாலம். பன்முறை. படித்துச் சுவைக்க வேண்டிய கட்டம் இது. கதையின் ஜீவநாடி.

விதவை நிலையடைந்த காந்தாவின் உள்ளம் எப்படியிருக்கிறது பாருங்கள்!

“நான் விதவையானேன்; சகுனத் தடையானேன்; சமுதாயத்தின் சனியனனேன்; என் இளமையும் எழிலும் போகவில்லை; கண்ணாெளி போகவில்லை; நான் அபலையானேன்; அழகியாகத் தானிருந்தேன்; தாலி யிழந்தேன்; ஆனால் காய்ந்த தளிர் போலிருந்தேனேயன்றி சருகாக இல்லை... வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடையுள்ள மலரென்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா?... எங்கள் ஏழ்மை யைக் கண்டு உதவி செய்ய முன்வர யாருமில்லை; எனக்குத் தக்கவனத் தேடித்தர ஒருவரும் வரவில்லை; என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வர வில்லை. எல்லாம் முடிந்து நான் விதவையானதும், என் விதவைத் தன்மை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்படி செய்ய, உபதேசிக்க, உற்றார் வந்தனார். அவர்களுக்கிருந்த கவலை எல்லாம் குலப்பெருமைக்குப் பங்கம் வரக்கூடாதென்பது தான். என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. எனக்கு வீடே ஜெயில்; அப்பா அம்மாவே காவலாளிகள், உறவினார் போலீஸ்; ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள். இது உலகம் எனக்குண்டாக்கி வைத்த ஏற்பாடு; இதற்காகவா நான் பிறந்தேன்?”

என்று கேட்கிறாள் காந்தா. இது கதையில் காந்தா சொல்வதல்ல. கோடிக்கணக்கான இளம் விதவையர் உள்ளத்திலிருந்து எழும் கூக்குரல்.

பக்கம் பக்கமாக எழுதிப் படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல் விஷயத்தைச் சுருக்கி இனிய நடையில் தோழர் சி. என். ஏ. அவர்கள் சொல்லும் எழிலைப் பாருங்கள்!

“அவரிடம் (கிழவரிடம்) பணம் இருந்தது. ஏழ்மையில் நெளிந்துகொண்டு நானிருந்தேன். கிடாபோல்