பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

503


பியலிலேயே முடிந்ததுதான் பொது மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்றதென்று கடிதம் எழுதினார்.

சீர்திருத்தக் கருத்துக்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானல் அவர்கள் மனத்திலே மாற்றம் காணச் செய்வது தான் நல்ல வழி. அதற்கு மாறாகப் பெற்றோர்களையோ சமுதாயத்தையோ எதிர்த்து இளைஞர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று காட்டுவது இளம் உள்ளங்களை மட்டுமே நிறைவு செய்யும். பெரும்பாலானவர்கள் சமுக சீர்திருத்தத்தை ஏற்க வேண்டுமானால் - அதற்காக நடைபெறும் நாடகங்கள் துன்பியலில்தான் முடியவேண்டும் என்பது அறிஞர்கள் கருத்து. நாடக ஆசிரியரின் கருத்தும் இதற்கு ஒத்திருந்தது. எனவே மூன்றாவது வாரம் முதல் முள்ளில் ரோஜா நாடகத்தைத் துன்பியலிலேயே முடித்தோம்.