பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எங்கள் நாடக அரங்கம்

நாடகவாழ்க்கையில் பல ஆண்டுகள் உழன்று தட்டித் தடுமாறி வந்த நாங்கள் எங்கள் நாடக அரங்கு என்று உரிமை யோடு சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் ஷண்முகா அரங்கம் உருவாகியிருப்பது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

சொந்தத் தியேட்டரில் முதல் நாடகமாக 11- 11. 47இல் ஒளவையார் நாடகம் நடைபெற்றது. சுதத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அன்று தலைமை தாங்கினார். மனம் திறந்து பாராட்டினார்.

கே. ஆர். சீதாராமன் ஒளவையார்

பில்ஹணன் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இரவில் நாடகத்திலும் பகலில் படத்திலுமாக நடித்து வந்தேன். அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டு நாடகம், படம் இரண்டுக்கும் இடையூறு ஏற்படும்போல் தோன்றியது. இரவில் படப்பிடிப்பை வைத்துக் கொள்வதற்கும் முடியாமலிருந்தது. ஒளவையாருக்கு நல்ல வசூலாகியதால் அதனை நிறுத்தவும் விரும்பவில்லை. எனவே எங்கள் குழுவின் நீண்டகால அனுபவம் பெற்றநடிகரான கே. ஆர் சீதாராமனை ஒளவையாராக நடிக்க வைக்கலாம் என்று முடிவுசெய்தேன். 19.11.47 முதல் கே ஆர். சீதாராமன் ஒளவையாராக நடித்தார். மாலை 6மணிக்குமேல் நான் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட நேர்ந்ததால் நாடகத்தைப் பார்க்க இயலவில்லை. படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டதால் அதைப்பயன் படுத்திக் கொண்டு ஒருவருக்கும் சொல்லாமல் சபையில் இருந்து நாடகத்தைப் பார்த்தேன். தம்பி சீதாராமன் ஒளவையாராக மிக அருமையாக நடித்தார். அற்புதமாகப் பாடினார். தொடர்ந்து அவரே ஒளவையாராக நடிக்கலாம்