காந்தி கற்பித்த கலை
“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன். வானுறைபும் தெய்வத்துள் வைக்கப்படும்”. இவ்வாறு வாழ்வது சிரமமே யாயினும் இவ்வாறு வாழ வேண்டுமென்ற எண்ணம் இடைவிடாமல் நம் மனத்தில் இருந்து கொண்டிருந்தால் போதும். அந்த எண்ணம் உடையவரே பண்பாடு உடையவர் என்று பவிஸ் என்னும் சிறந்த ஆசிரியர் தமது 'பண்பாடு’ என்னும் நாலில் கூறுகிறார்.
இந்த எண்ணம் - எளிய வாழ்க்கை வாழ வேண்டும். பிறர் உழைப்பை உபயோகிப்பதை குறைக்கவேண்டும். பிறரிடம் அனுதாபம் உடையவராக நடந்து கொள்ள வேண்டும், சுயநலத்தைச் சுருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் உடையவர் சில சமயங்களில் தவறினாலும் பாதகமில்லை. “வீழாமையன்று பெருமை, விழுந்தொறும் தாழா தெழுதலே” என்று ஆங்கிலக் கவிஞர் கோல்ட்ஸ்மித் கூறுவது அவர்க்கு ஊக்கமளிக்கும்.
அந்த எண்ணம் சிறிதுமில்லாதவர் எந்தப் பட்டங்கள் பெற்றிருப்பினும் அவர்கள் “அணிகள் வேய் பிணத்தோ டொப்பார், அன்னவர் வாழ்க்கை பாழாம்” என்று பாரதியார் கூறுகின்றார்.
ஆதலால் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் காந்தியடிகள் கற்பித்த இந்தக் கலையைக் கைக்கொள்வோமாக.
—0—
—72—