10
ஏமாந்த இரண்டு திருடர்கள்
[அங்கம்-1
பாரு! -அந்த எழவெடுத்த மாடு எக்கேடாவது கெடட்டும் - இங்கே படுத்துகினு கொஞ்சம் எளப் பாறிவட்டு சாயங்காலமா ஆடுபோய்ச் சேருவோம் !
ஐந்தாம் காட்சி
இடம்: ஆற்றோரமுள்ள ஒரு கீரைப் பாத்தி - ஒரு பக்கம் ஒரு ஆழமான கிணறு இருக்கின்றது.
காலம் நடுப்பகல்.
அப்பாசாமி முதலியாரும் பலே திருடனும், அதன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கின்றனர்.
அ.ஏண்டாப்பா ! இப்போ உன்னே ஜோட்டாலே அடிக்கனுமோ இல்லையோ ? பாதி பாத்திக்கி பாய்ச்சியாயிச்சி இண்ணயே, எங்கேடா ஆச்சி? கீரே பாத்தியிலே ஒரு சொட்டு தண்ணியும் காணோம்!
பலே எஜமான் கோவிச்சிக்கக் கூடாது !- இந்த தொட்டியெ பாத்தைங்களா-ஓட்டையாயிருக்குது - இந்த பாழுங்கெணத்துலே அறுவது படி எறங்கி இந்த தொட்டி தண்ணி எடுத்துகினு வந்தா-இந்த அறுவது படி ஏற்றத் துக்குள்ளோ-அல்லா தண்ணியும் கெணத்திலேயே வடிஞ்சி போவுது ! நான் என்ன செய்யரதுங்க ?
அ.அதுக்கோசரம் எங்கிட்ட பொய் பேசனயோ-பாதி பாத்தி பாய்ச்சி ஆச்சி இண்ணு! அதெல்லாம் எனக்கு தெரியாது-வைக்கல் கிக்கைல் என்னமானு வைச்சி அடைச்சி தண்ணி மொண்டு பாய்ச்சு; சாயந்தரத் துக்குள்ளோ பாத்தி முழுதும் தண்ணி பாய்ச்சாப் போன, உனக்கு இண்ணக்கி சாப்பாடு கிடையாது. இந்த பஞ்ச காலத்துலே ஒனக்கு என்னத்துக்கு தண்ட சோறு போடரது! வேலெயெ முடிக்காதே வூட்டுக்கு வந்தையா-பாரு சொல்ரேன் !