[காட்சி.2]
ஏமாந்த இரண்டு திருடர்கள்
7
மூன்றாம் காட்சி
இடம்-அதே இடம்.
காலம் - சாயங்காலம்.
அ. ஏண்டாப்பா, ராத்திரி இங்கே திண்ணையிலே படுத்துகினு இருந்தும் பக்கத்தறையிலே எவனே திருடன் கன்னம் வைக்கப்பாத்ததே உங்களாலே கண்டு பிடிக்க முடியலையே! நான் தான் கெழவன்- உங்களுக் கென்னடாப்பா நல்ல வயசு காருங்கோ, எழுந்திருந்துபோய் அவனெ பிடிச்சி இருக்கக் கூடாது ?
பலே. இல்லெங்கோ- நல்ல தூக்கம் வந்துது ராத்திரி, எனக்கு ஒண்ணும் சத்தமே கேக்கலே.
பக். எனக்கு ஒடம்பெல்லா கொஞ்சம் வலியாயிருந்து துங்க-தூங்கிவுட்டேன்-அந்த தூக்கத்திலே அப்படியே-தெரியாதெ போச்சி.
அ. சரி இண்ணைக்காவது - ஜாக்கிரதையா யிருங்க.
(உள்ளே போகிறார்)
பலே. அண்ணா, நம்போ தோண்டன பள்ளத்தெ மண்ணெ போட்டு மூடிவுட்டும், இந்த கெழம் எப்படியோ அத்தெ கண்டு பிடிச்சுட்டுது பாத்தைங்களா ?
பக். போன போவது !-வேறே என்னமானலும் வழி தான் பாக்கனும்-தம்பி இண்ணைக்கி உன்வேலே என்ன மாயிருந்தது ?-அந்த மாட்டே சரியா மெய்க்கலே அவன், நீ நாளெக்கு அந்த வேலயெ பாரடா அப்பா இண்ணு என் கிட்ட சொல்லிச்சி அந்த கெழம்-அது என்ன சமாசாரம் !
பலே. மாட்டே சரியா மேய்க்கலையா ?-அது பச்சை பில்லே ரொம்ப திண்ணுட்டு தள்ளாடிகினு வந்து சேர்ந்தது ஊட்டுக்கு! - ரொம்ப நல்ல மாடு. மேய்க்க காட்டுக்குப் போனவுடனே, அவுத்து உட்டேன், அதுவா பெசாதே மேய்ஞ்சிகினு இருந்துது-நான் நண்ணா