இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
67 0 முருகுகந்தரம் துஷ்யந்தன்:
சாகசக் காரி உன்கற்பைத் தொலைத்தது போல்
கணையாழியையும் தொலைத்து விட்டாயோ? சகுந்தலை:
எனதுகற்பைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது? புல் மூடியிருக்கும் படுகுழி போல் பொல்லாத மன்னவனே! சிலந்தியைப் போல் வாய்ப்பந்தல் போட்டு என்னையுன்வலையில் சிக்கவைத்துவிட்டாய்! அரசாங்க வைரக்கத்தி காதலியைத்தாக்காது என நினைத்து நானும்தரங்கெட்டேன், துஷ்யந்தன்:
பெண்ணே!
அத்து மீறிப் பேசுகிறாய்! உன்னைஎச்சரிக்கிறேன்.
சகுந்தனை:
பெண்டிர் கற்பின் மீது படையெடுப்பு நடத்தும் மன்னா! உன் பஞ்சணையும் இனி எனக்குப்