பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xx எழுத்துஉலகின்நட்சத்திரம் தீபம் நா.பார்த்தசாரதி) உலக நோக்கும் அவசியம் தேவை என்பதை தீபம் நினைவுறுத்தத் தவறவில்லை. . - நடுநிலையோடு நோக்குகிற போது,எவ்வாறு தீபம் தனித் தன்மையோடு, மொழிக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் இடையறாது தொண்டாற்றி மிளிர்ந்தது என்பது புரியும். - முடிவுரையாக, நா.பா.வின் மதிப்பீட்டைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் ஒரு சீராய்-நிதானமாய்-ஒளிபரப்பும் மங்கலமான குத்து விளக்குப் போல், பதறாமல்- பயப்படாமல்- நிதான்மாய் தனது இலக்கியப் பணியை செய்துள்ளது தீபம். ஆடம்பரமான மின் விளக்குகள் பல வந்துவிட்டாலும், அகல் விளக்கும் குத்து விளக்கும் எப்படி பண்பாட்டின் மங்கலச் சின்னங்களோ, அப்படியே கவர்ச்சியையே முக்கியமாகக் கொண்ட பல பத்திரிகைகளிடையே தீபம் போன்ற தீவிர இலக்கிய இலட்சியப் பத்திரிகைகள் நமது கலை இலக்கியப் பண்பாட்டின் சின்னங்களாகயிருக்க முடியும்." -