பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் 'தீபம்' நா. பார்த்தசார ழுதது த - அவர் பேசி முடித்த பிறகு நேருக்கு நேர் நிகழ்ச்சியும் சேர்த்தே ஏற்பாடு செய்யப்படும். இலக்கிய அன்பர்கள் அவரைக் கேள்வி கேட்பார்கள். அவர் அந்தக் கேள்விகளுக்கெல்லாம் கேட்டவர் ஏற்கும் வகையில் பதில் சொல்வார். இன்று நயம்படப் பேசும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசியல் போலவும் திரைத்துறை போலவும் இலக்கியவாதிகளும் தனிமனிதத் தாக்குதலில் இறங்கத் தொடங்கிவிட்டார்கள். வீண் அகம்பாவம் கொண்ட அறிக்கை களையும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளச் சாதனை - யாளர்களை அவதூறு செய்யும் அநியாயத்தையும் எழுத்தாளர்கள் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். இன்றைய சூழலில் நா.பா.வின் கண்ணியமும் நாகரிகமும் நிறைந்த பண்பட்ட பேச்சு நினைக்கும்போதெல்லாம் அதைக் கேட்டவர் மனத்தில் இனிக்கிறது. -