பக்கம்:ஐந்திணை வளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஐந்திணை வளம் குறியிற் சந்திப்பதுகூட அவர்களுக்கு எளிதாயில்லை. இந்நிலையிலே பொங்கிய அவளது காமவேகம் அவளுடலினையும் பற்றி நலிவிக்கத் தொடங்குகின்றது. அவள் மேனியின் மாற்றத்தைக் கண்ட தாய், அது அணங்கு வருத்தியதனாலே வந்துற்றதாக இருக்குமெனக் கருதி, அதனை ம்ாற்றுவதற்கு நினைந்து வேலனை அழைக்கின்றான். அவனும் வந்துமறியறுத்துப்பலியிட்டுவெறியாடுதலுக்கு ஏற்பாடுகளைச் செய்கின்றான். - தலைவியின் மனம் தன் வீட்டிலே நிகழுகின்ற வெறியாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டதும், பெரிதும் வேதனைப் படத் தொடங்குகின்றது. தன் தோழியிடம் சென்று, தன் மனவேதனையைக் கூறுகின்றாள். 'தோழி! நீண்டகதிரையுடைய பசுந்தினையை, வளைந்த வாயினையுடைய கிளி கவர்ந்து செல்லுகின்றதன்மையினாலே, என்னைப் புனங்காவலுக்கு அனுப்பினர். அவ்விடத்தே, விளக்கமாகத்திகழாநின்ற சோலைகளையுடைய மலைநாடனின் நட்பு ஒன்றினையே பெற்றேன். அதனால், ஆர்வத்தோடு மிகுதியும் அவனைத் தழுவியும் இன்புற்றேன். 'அன்னையும் வேலனும் இவற்றை அறியாராயினர். தெய்வம் என்னை அணங்கியது எனக் கொண்டு வேலன் ஆட்டுக்குட்டியைப் பலியாக அறுத்துப் படைத்து வெறியாடுதற்கும்.துணிந்தனனே! இனியாது செய்வேன் நான்? இப்படிக் கூறியதனால், நீ சென்று, என் நிலையின் உண்மையைத் தாய்க்கு உரைத்து, இந்த வெறியாடலைத் தடுப்பாயாக எனக் கூறினாளாகக் கொள்க. வார்குரல் ஏனல் வளைவாய்க் கிளைகவரும் நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையே ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும் ஈர வலித்தான் மறி. தலைவி இவ்வாறு சொல்வது, அறத்தொடு நிற்றல் ஆகும். அறத்தொடு நிற்றலாவது, தான் கொண்ட தலைவனுடன் தனக்கு மணவினை நிகழ்த்துமாறு, தன் உறுதியினைத் தெரிவித்து, அதன்கண்ணே தளராது நிலைபெறுதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/40&oldid=761841" இலிருந்து மீள்விக்கப்பட்டது