இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. மயில் கேட்கிறது
‘மயில்’ என்றதும் நீங்கள் ஆண் மயிலை நினைத்துக் கொண்டுவிடப் போகிறீர்கள். நான் பெண் மயிலாக்கும். அதனால்தான் ஆண்களை விட்டு விட்டுப் பெண்களைக் கேட்கிறேன்.
‘இயற்கையை வெல்லுகிறோம், இயற்கையை வெல்லுகிறோம்’ என்று சொல்லிக் கொண்டு நீங்கள் எதை வெல்கிறீர்கள்?
‘உங்களுக்கு காங்கள் ஒன்றும் இளைத்தவர்கள் அல்ல’ என்று ஆண்களோடு சேர்ந்துகொண்டு நீங்கள் மண்ணை வெல்கிறீர்களா?
இல்லை.
விண்ணை வெல்கிறீர்களா?
இல்லை.
காற்றை வெல்கிறீர்களா?
இல்லை.
நீரை வெல்கிறீர்களா?
இல்லை! நெருப்பை வெல்கிறீர்களா?
அதுவும் இல்லை.