பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரத்தின் தோல்வி

கட்டழகும் வீரமும் உடைய காளே அவன். எத் தனேயோ காரியங்களேச் சாதிக்க வல்லவன். மலையைப் புரட்ட வேணுமா? அவனைப் பிமனென்றுதான் சொல்ல வேணும்; அப்படியே தூக்கி நிறுத்துவான். காலம் அறிந்து இடம் அறிந்து காரியங்களேச் செய்யும் சக்தி படைத்த வன் அந்த இளவீரன்.

விட்டுக்கு மாங்காய் வேண்டும் என்று அம்மா சொல்ல வேண்டியதுதான் தாமதம் அடுத்த் கணத்தில் ஒருவண்டி மாங்காய், மாந்தோப்புக்குப் போய்க் கொண்டு வந்துவிடுவான். அப்பா, பூசைக்குப் பூ வேண்டும் என் ருல் குடலே குடலேயாகக் கொண்டுவந்து தள்ளுவான். எங்கேதான் அவனுக்குப் பூக் கிடைக்குமோ ! இன்று புளியங்காய் வேணும் தேங்காய் வேனும் கார்த்தங்காய். வேணும் என்று அவன் காதிலே போட்டுவிட்டால் இந்த உலகத் திலுள்ள காய் மரங்களையெல்லாம் ஒருகை பார்த்து விட்டு வந்துவிடுவான். -

அம்பும் வில்லும் எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போவான். அவனுடைய வேட்டையில் அகப்படாத மிருகம் இல்லை. கறுகறுவென்று காரழகளுக கிற்கும் அவ. இனப் பழங்காலத்துக் கண்ணப்பனுகச் சொல்லலாமா? சாட்சாத் காமனே காரழகன்தானே? அவனுக்கு இவன் இளேத்தவன? அவன் கைக் கரும்புவில்லுக்கு இவன் கைவில் மகிமை குறைந்ததா? இவனுடைய குஞ்சியழகும். வில்லழகும். மேனியழகும் கண்டால் மடமங்கையர்