பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கஞ்சியிலும் இன்பம்


    ரண்டு பேர்கள் சேர்ந்து உடுக்கு அடிக்கும்போது அந்த இடம் முழுவதும் பெரிய உற்சாகம் நிலவும். ஆவேசம் வந்தவனைப்போல ஒருவன் உடுக்கடித்துப் பாடுவான்; ஒவ்வொரு வரிக்கும் மற்றொருவன் 'ஆமாமா' என்று பின்பாட்டுப் பாடுவான். ஒரு சரணம் முடிந்தவுடன் 'ஆமாமா'ப் போட்டவன் பாடுவான்; முன்னாலே பாடினவன் ஆமாமா'ப் போடுவான். இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்சிக்கொண்டு பாடுவார்கள். கூட்டத்தில் ஆரவாரமும் ஆவேசமும் அளவுக்கு மிஞ்சி எழும்.
*
    பூசாரி தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வந்தவன். மிகப் பழங்காலத்திலும் அவன் உடுக்கடித்துப் பாட்டுப் பாடித் தெய்வங்களை வருவிப்பான். பெரும் பாலும் முருகனையே அவன் பூசிப்பான். தன் கையில் வேலை வைத்துக்கொண்டு ஆடுவான். இன்றும் கொங்கு நாட்டில் வேலே வைத்துக் கொண்டு ஆடும் வழக்கத்தைப் பார்க்கலாம். பூசாரி வேலே வைத்திருந்தமையால் அவனுக்கு வேலன் என்ற பெயரை முன்காலத்தில் அளித்திருந்தார்கள். தெய்வ விக்கிரகத்தைப் படிமம் என்று சொல்வார்கள். அதனைப் பூசை செய்வதனால் பூகாரிக்குப் படிமத்தான் என்றும் ஒரு பெயர் வழங்கி வந்தது.

மலை சூழ்ந்த இடங்களில்தான் பூசாரி மிகுதியாக வசித்து வந்தான். அந்தப் பகுதியைக் குறிஞ்சித் திணையென்று தமிழர்கள் வகுத்தார்கள். அதற்குத் தெய்வம் முருகன். முருகனுக்குக் கள்ளையும் ஊளையும் தினையரிசியையும் வைத்து ஆட்டைப் பலியிட்டுக் குறச்சாதியினர் வழிபடுவார்கள். அப்போது பூசாரி மணியடித்துத் துடி கொட்டி முருகனை ஆவேசமாக வரச்செய்வான்.


    அரசன் யுத்தத்திற்குப் போவதற்கு முன்பும், யுத்தத்திலிருந்து வெற்றியோடு மீளும்பொழுதும் பூசாரி பூசை