பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிவெளி பிறவிகளில் தொடர்ந்து வருகிறது; உடம்பின் வாழ்வு ஒரு பிறவி யோடு நின்றுவிடுகிறது. இப்போதே வீடு அறம், பொருள், இன்பம், வீடு என்கின்ற நாலு உறுதிப் பொருள்களில் வீடு என்பது உயிர் அடையும் இன்பம். வீட்டு நெறியிலே செல்வது உயிரை ஒட்டிய முயற்சி. வீட்டு நெறி வாழ்க்கை உடம்பையும் உள்ளத்தையும் பயன்படுத்திக்கொண்டு உயிருக்கும் நலம் தரும் வாழ்க்கை; 'என்றோ, எப்பொழுதோ வீடு கிடைக்கப் போகிறது. அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு?' என்று யாரும் இந்த நாட்டில் இருப்பது வழக்கம் இல்லை. மூச்சுவிடுவது முதல் தூங்குகிற வரைக்கும் எல்லாமே வீட்டை லட்சியமாகக் கொண்டு அமைய வேண்டும் என்பது பெரியோர் கொள்கை. ஆகவே, இந்த வாழ்வில் நாம் அ.ை கின்ற இன்பங்களைக் கண்டு அதோடு நின்றுவிடாமல் இப்போது உண்டாகும் துன்பங்களை மாற்றுவதற்கும், மேலும் இன்பத்தை வளர்ப்பதற்கும் நிலையான காரியங்களைச் செய்ய வேண்டும். வாழ்வு தொடர்ந்து வரும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, நல்ல காரியங்களை இந்த வாழ்வில் செய்ய வேண்டு மென்று நூல்கள் கூறும். 'அவற்றின் பயன் இந்த வாழ்வில் கிடைக்கவில்லையே! அடுத்த பிறவியில் கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்' என்ற சந்தேகப் பேர்வழிகளுக்கு இந்த உண்மை கள் புலனாகா, தான் ஒய்வு பெற்ற பிறகு நலம் பெற வேண்டு மென்று சேமிப்புச் செய்கிறான். இதைப் போலத்தான் அடுத்த பிறவிகளுக்கு வேண்டுமென்று இப்போதே ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தப் பிறவியிலேயே வீட்டு இன்பத்தைப் பெற முடியுமா? நாளடைவில் உயிர் தூய்மைபெற்று இறைவனோடு ஒன்றித் திருவருளைப் பெறுகிறது. மனிதனாகப் பிறந்த உயிர் இந்த ஒரு பிறவியினாலேயே அடைய வேண்டிய முழு இன்பத்தையும் அடைந்துவிடலாம் என்பது ஓர் உண்மை. இதையும்விட மிகவும் பெரிய உண்மை, இந்த உடம்பு இருக்கும்போது இந்த வாழ் விலேயே நாம் பெறவேண்டிய முழு இன்பத்தையும் பெற்று விடலாம் என்பது. இந்த நாட்டிலுள்ள பெரியவர்கள் இந்த க.சொ.VI-16 245