பக்கம்:கனவுப்பாலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கனவுப் பாலம் நவீன வசதிகள் நிறைந்த ஆடம்பர ஒட்டல். கம்ப் யூட்டர்களும், கால்குலேட்டர்களும், மின் சாதனங்களும் ஒட்டலே நிர்வகித்துக் கொண்டிருந்தன. 'இந்த முரடர்களிடமிருந்து தப்பவே முடியாதா?’’ கோபால் சிந்தனேயில் தீவிரப்பட்டிருந்தான். மனதில் நிம்மதி இல்லாதபோது சுற்றிலும் உள்ள சுகங்களும் ஆடம்பரங் களும் உற்சாகம் தருவதில்லை. - - திடீரென்று அறைக்குள் அடர்த்தியாகப் புகைசூழ்ந்தது. கண்களில் எரிச்சல் உண்டாயிற்று. மூச்சு முட்டிற்று. அடுத்த கணம் ஒட்டல் முழுதும் எச்சரிக்கை மணி பயங்கரமாக ஒலித்தது. தீ தீ!’ என்ற கூச்சலுடன் அறைகளிலிருந்து பதற்றத்துடன் வெளிப்பட்ட மக்கள் தலை தெறிக்க ஓடினர் கள். ஒட்டலே அல்லோலகல்லோலப்பட்டது. அடுத்த கணமே கோபால் அம்பெனப் பாய்ந்து லிஃப்டுக்கு ஓடினன். அங்கே சினிமா விட்டதுபோல் பெருங்கூட்டம் முட்டி மோதிக் கொண்டிருந்தது. முரடர்களுக்குத் தெரியாமல் அந்த கும்பலோடு சேர்ந்து நழுவி விட்டான். வெளியில் நெருப்பனேக்கும் படையினர் சடுதியில் தோன்றி போராடிக் கொண்டிருந்தனர். தீயனேக்கும். என்ஜின்களிலிருந்து புறப்பட்ட ஏணிகள் உயரத்தில் நீண்டு ஜன்னல் வழியாக ஆட்களை வெளியேற்றிக்கொண்டிருந்தன. கும்பலோடு சேர்ந்து லிஃப்ட்டில் புகுந்த கோபால் வேகமாக வாசலுக்கு விரைந்தான். அங்கே நின்ற டாக்ஸி யில் பாய்ந்து ஏறி மிட்ஸ்அயோ ஸ்டோர் போய் நின்றன். அயாகோ டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று கோபால் எதிரில் வந்து நிற்பதைக் கண்டு. திடுக்கிட்டாள். - பயப்படாதே கடையை உள்பக்கம் பூட்டி வீடு, அவர்கள் இங்கே வந்து கொண்டிருக்கிருர்கள். என்ன நம்பு எனக்கு உதவி செய்!” என்ருன் கோபால், யோர் அவர்கள்???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/26&oldid=768618" இலிருந்து மீள்விக்கப்பட்டது