பக்கம்:கனவுப்பாலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

守町6á - 43 கெளதம் அந்த இரவில் இன்பங்களே எதிர்பார்த்து வந்திருக் கிருன். அந்த இளைஞனேப் பெண் மோகம் சுண்டி இழுத்திருக் கிறது. 'கடற்கரையில் இனிமையாகப் பொழுது போக்கலாம்’ என்ற ஆவலில் அந்த எக்ஸிக்யூடிவ் வந்திருக்கிருர். அவரு டைய வீக்னஸ் அது. இந்த மாதிரி ஆசைக்கெல்லாம் பெண்கள் மசிய மாட்டார்கள் என்பதால் அந்தப் பெண்கள் இருவருக்கும் மட்டும் வேறு மாதிரியான அழைப்பு. ஒருத்திக்கு முக்கியமான ஒரு ஆசாமி பற்றிய ரகசியம். இன்ைெருத்திக்கு கணவரைப் பற்றிய ரகசியம். செலவுக் குப் பணம் வேறு வேண்டாமே? என்று ஒதுக்கிவிட முடியுமா? போய்தான் பார்ப்போமே? என்று தூண்டுகிற அழைப்பல்லவா? • அழைக்கப்பட்ட ஐந்து பேருமே தவருமல் வந்து விட்டார்கள். அடுத்து, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். அந்த இருபது வயது மங்கையின் பெயர்,-ஷினே டி கொமாய். ஒரு கம்பெனியில் வேலே , ஐம்பது வயதுக்காரர் பெயர்,- ஸுஜூரா கோஷி காவா. யோகஹா மாவிலுள்ள ஒரு வியாபார நிறுவனத் தின் எக்ஸிக்யூடிவ். - ... ", - அந்த இளைஞன் ஒரு மாணவனே தான். இன்னமும் படித்துக் கொண்டிருக்கிருன். பெயர்,-ஷிரோ கயமா. அந்த நாற்ப்து வயதுக்காரி ஒரு டாக்டரின் மனேவி. பெயர்,-ஷிகிகோ காமி. கணவர் டோக்கியோ ஆஸ்பத்திரி ஒன்றில் லர்ஜன். - - ஐந்து பேருமே இதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. அறிந்ததில்லே. எதற்காக இவர்களே இங்கே அழைத்திருக்கிறர்கள்? அழைத்தது யார்? ஆ,ை பெண்ணு? அந்த ஆசாமி எங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/39&oldid=768632" இலிருந்து மீள்விக்கப்பட்டது