பக்கம்:கனவுப்பாலம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 45 அது என்ன மர்மமோ? எல்லாருமே யோசித்தார்கள். ‘ஒரு வேளே நம் ஐந்து பேருடைய பிறந்த தேதியில் ஒற்றுமை இருக்கலாம். ஒரே தேதியில் பிறந்திருக்கலாம்!” என்ருர் ஐம்பது. 'நாம் ஐந்து பேரும் எந்தப் பத்திரிகைக்காவது சந்தா கட்டியிருக்கலாம். அதிலிருந்து அட்ரஸ் பிடிச்சிருப்பாங்க” என்ருன் இளைஞன். ஊஹூம்; அ தெ ல் லாம் இருக்காது. எதுக்கும் ரிஸப்ஷன் டெஸ்க்கைக் கூப்பிட்டு விசாரித்து விடுகிறேன். ஏதாவது தகவல் தெரியுதா, பார்க்கலாம்’ என்ருன் கெளதம். - எழுந்து போய் டெலிபோனே எடுத்துப் பேசினன், பல கேள்விகள் கேட்டான். கடைசியில் தோளேக்குலுக்கிக் கொண்டு அவர்களுக்கு ஒன்றும் தெரியாதாம். பத்து நாளேக்கு முன்பே இந்த ரூமை யாரோ நகுமாரா என்ற பெயரில் இன்றைய தேதிக்கு புக் செய்து விட்டுப் போர்ைக ளாம். இன்று மாலே ஐந்து பேர் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளெல்லாம் செய்து கொடுங்கள் என்று சொல்லி ஏராளமான பணத்தையும் அட்வான்ஸ்ாகக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறர்களாம். யார் அந்த நகுமாரா என்று கேட்டால் தெரியவில்லே என்கிருர்கள். எல்லாம் வேடிக்கையாயிருக்கிறது? ஒரே மர்மமாயிருக் கிறது. நம்மாலும் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லே. நான் ஒரு பத்திரிகை நிருபர். துப்புத்துலக்குவதில் கெட்டிக் காரன் என்று பெயர். இப்போது துப்புக்கெட்டவய்ை எதுவும் புரியாமல் விழிக்கிறேன். வெட்கமாயிருக்கிறது’ என்ருன் கெளதம். எல்லோரும் பேந்தப் பேந்த விழித்து விட்டு, கொஞ்சம் அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே சரியான இளித்த வாயர்களாயிட்டோம் என்றனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/41&oldid=768635" இலிருந்து மீள்விக்கப்பட்டது