இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆனந்தம் கவிதைகள்
தீண்டிட அருகிற் செல்வாள்;
- திடுக்குற்று விலகி நின்று
வேண்டுவார், பயிலும் போது
- விளையாட்டு கூடா தென்று!
"மாண்டிட எனைவ தைக்க
- மணந்தது குற்றம்!” என்பாள்;
"ஆண்டினிற் சிறிய உன்னை
- அழைத்தும் யானோ" என்பார்.
'என்னுடன் பேசில் இன்பம்
- என்விழி பருகின் சொர்க்கம்
பொன்னுடல் தன்னைத் தொட்டால்
- பூலோகம் ஈடாம் என்ற
மன்னவர் பலர்இ ருந்தார்!
- மதியிழந் தும்மைத் தேர்ந்தேன்!
இன்னுமேன் உயிர்வாழ் கின்றேன் ?'
- என்றொரு முடங்கல் தீட்டித்
- என்றொரு முடங்கல் தீட்டித்
31