பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Гані) = - -- |THFRUT 97 பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையெனும் திருநிதியின் பொழிய, நாகக் கன்று வளர் தடம் சாரல் மயேந்திரமா நெடுவரையும் கடலும் கண்டிர்” என்றெல்லாம் தென் திசையில் எங்கெல்லாம் சென்று சீதையைத் தே வேண்டும் என்பதை தென் திசை வழியில் உள்ள சிறப்பான முக்கிய இடங்களை யெல்லாம் குறிப்பிட்டுச் சுக்கிரீவன் அனுமனிடம் விவரித்துக் கூறுகிறான். மங்கையர் இவளை ஒப்பார் அதன் பின்னர் இராமன் தனது முழு நம்பிக்கைக்குரிய அனுமனைத் தாயாக அழைத்துச் சென்று அவ்வனுமனிடம் சீதையின் தோற்றத்தைப் பற்றி விவரமாக எடுத்துரைத்தான். அந்த வார்த்தைகளில் சீதையின் மீது இராமனுக்குள்ள அளவு கடந்த அன்பையும் காதலையும் காண முடிகிறது. 'குழல் படைத்து, யாழைச் செய்து குயிலோடு கிளியும் கூட்டி, மழலையும், பிறவும் தந்து, வடித்த தைம் மலரின் மேலான் இடைபொரும் இடையினாள் தன் இன்சொற்கள் இயையச் செய்தான் பிழையிலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறுங்கொல் இன்னும்' என்றும், இன்னும் அவளுடைய நிறத்தை உரைப்பதானால் 'எந்நிறம் உரைக்கேன், மாவின் இள நிறம் முதிரும்; மற்றைப் பொன்னிறம் கருகும்; என்றால் மணி நிறம் உவமை போதா, மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின் தன்நிறம் தானே ஒக்கும்; மலர்நிறம் சமழ்க்கும் அன்றே” மங்கையர் இவளை ஒப்பார், மற்றுளார் இல்லை என்னும் சங்கையில் உள்ளம் தானே சான்றொக் கொண்டு, சான்றோய்; அங்கவள் நிலைமை எல்லாம் அளந்தறிந்து, அருகு சார்ந்து, திங்கள் வாள் முகத்தினாட்குச் செப்பு எனப்பின்னும் செப்பும் முன்னைநாள், முனியொடும் முதிய நீர் மிதிலை வாய்ச், சென்னிநீள் மாலையான் வேள்வி காணியசெல அன்னம் ஆடும் துறைக்கு அருகில் நின்றாளை அக் கன்னிமாடத் திடைக்கண்டதும் கழறுவாய்!