பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 140 <- ( بن حصلى الله عليه وسلم نے காதலும் பெருங்காதலும் 19. தவம் செய்த தவமாம் தையல் 'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தெண் திரை அலை கடல் இலங்கைத் தென்னகர், அண்டநாயக! இனித்துறத்தி! ஐயமும் பண்டுள துயரும்' என்றும் அனுமன் பன்னுவான்' உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் தன்பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்; என்பெரும் தெய்வம் ஐயா! இன்னமும் கேட்டி என்பான்” 'உன்குலம் உன்னதாக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய தன்குலம் தன்னதாக்கித் தன்னை இத்தணிமை செய்தான் வன்குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து, என் குலம் எனக்குத் தந்தாள், என் இனிச் செய்வது எம்மோய்' 'வில் பெருந்தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன், இற்பிறப்பு என்பது ஒன்றும், இரும்பொறை என்பது ஒன்றும், கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்’ “வேலையுள், இலங்கை என்னும் விரி நகர் ஒரு சார், விண் தோய் காலையும் மாலை தானும் இல்லது ஒர் கனகக் கற்பச் சோலை அங்கு அதனின், உம்பி புல்லினால் தொடுத்த துய சாலையில்; இருந்தான் ஐயா! தவம் செய்த தவமாம் தையல்' “மண்ணொடும் கொண்டு போனான்; வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்; உலகம் பூத்த கண்ணகன் கமலத்து அண்ணல் “கருத்திலான் தொடுதல் கண்ணின் எண்ணரும் கூறாய் மாண்தி” என்பது ஒர் மொழி உண்டு என்பான்”