பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 29

இன்னும் முதல் முகrவரம் பண்ணிக்கல்லே. அதற்குக் காமுப்பாட்டியை அல்லவா காசு கேக்கனும்! மீசையில் பொன்னரும்பு பளப்பளக்கிறது.

ஒரு சமயம் யுகம், ஒரு சமயம் நிமிஷம், நிமிஷமா மூணுவருடங்கள். இத்தனை நாள் இங்கே என்னவெட்டி முறிச்சிண்டிருந்தேன் ? ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேனா? ஊசலாடிக்கொண்டிருந்தேனா ?

உதறிக்கொண்டு எழுந்தேன். ஊஞ்சலை, ஊஞ்சல் சங்கிலியை, சங்கிலி உச்சிமேல் சொருகிய புல்லாங் குழலை ஒருமுறை பார்த்தேன். அது ஏதோ மந்திர கீதத்தை என்னுள் ஊதி என்னை ஒரு மாயத்துக்கத் திலிருந்து எழுப்பிவிட்டதா? தோப்பை ஒரு முறை சுற்றிக் கண்ணோட்டம். சட்டையுரிப்பு விடுதலை. பழஞ்சட்டை ஒரு விசனம். எப்படியும் பழகியசட்டை.

வீட்டுள் நுழைந்த போது, காமுப்பாட்டி, கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தான் அவள் நினைப்பு இங்கு இல்லை. வாயில் குஞ்சிரிப்பு-லேசாக மிதப்பலாகிவிட்ட அந்தமன நிலையில், அந்த முகம் அழகிட்டாற் போலக் கூட எனக்குத் தோன்றியது.

நேரே இருட்டறைக்குப் போய், பானையில் திணித்து வைத்திருந்த சொக்காய், துண்டு, வேட்டி என்கிற பேரில் எனக்கு உள்ள ஒன்றிரண்டு பழந்துணிகளை ஒரு பையில் திணித்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

காமுப் பாட்டிஏனென்று தெரியல்லே வெறும் காமுவென்று அழைத்துப்பார்த்துக்

கொண்டால் அவள் வயதுக்குச் சிறிய வளாய்த்வனிக்கிறாள் வெறும் பாட்டியென்று நினைத்துக் கொண்டாலும் பொருந்தவில்லை.