பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

என்றும், அழகிய தேரில் ஊர்ந்து செல்லும் சீரியன் என்றும் கூறுகிறார். அருவியின் ஓசைக்கு அவன் நாட்டு இசை வாத்தியத்தின் ஓசையினை உவமை காட்டுகிறார். பாண்டியர் குல பார்த்திபன் திதியன் என்பானை இங்ஙனம் சிறப்பிக்கின்றனர் எனில், திதியன் ஒரு சிறந்தவன் என்பதில் ஐயம் ஏற்படாதன்றோ !