பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலைமேலே மஞ்சு

109

நானடிக்க நீ யடிக்க
ரத்தங் கட்டிச் சாகடிக்க

சாகடிக்க, சாகடிக்க என்று பல முறை கூறிக்கொண்டு ஒடித் தொட முயலும்போது கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். ஆனால், இந்த விளையாட்டில் அச்சத்திற்கு இடமொன்றுமில்லை.

நெல்லு விளையும் நீலகிரி
நெய்க்கும்பம் சாயும் கள்ளிப்பட்டி
பாக்கு விளையும் பாலக்காடு
பஞ்சம் தெளியும் மஞ்ச வலசு.

மஞ்ச வலசு என்பது ஒர் ஊரின் பெயர். இந்தப் பெயரை விளையாடுபவர்கள் தங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளுவார்கள். ஒவ்வொருவருக்கும் அவருடைய பிறந்த ஊர்தானே முக்கியமானது? அதனால் நானும் இந்தப் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.