பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

காற்றில் வந்த கவிதை



ஒன்று பத்து நூறு


கிராமத்திலே சிறுவர்கள் விளையாடும்போது, "நான் ஆயிரம் எண்ணுகிறேன்; அதற்குள்ளே உன்னல் பாட்டி யைத் தொட்டுவிட்டு வர முடியுமா?' என்று ஒருவன் கேட்பான். விஷயம் தெரியாதவன், "ஒ என்னல் முடியும்” என்று பந்தயம் போடுவான்; ஒடவும் செய்வான். முதலில் இந்த ஒட்டப் பந்தயத்தைப்பற்றிப் பேசியவன், 'அடுப்பு, துடுப்பு, ஆயிரம்" என்று முடித்துவிடுவான். திண்ணையிலே உட்கார்ந்திருக்கும் பாட்டியைத் தொட்டுவிட்டு வர ஒடியவன் பாதி தூரம்கூடச் சென்றிருக்கமாட்டான்; அதற்குள்ளே ஆயிரம் என்று சொல்லி முடிந்துவிடும்.

எல்லோரும் சிரிப்பார்கள். ஒடத் தொடங்கியவன் மட்டும் இவ்வாறு ஆயிரம் எண்ணுவதை ஒப்புக்கொள்ள மாட்டான். மற்றவர்கள் இப்படி எண்ணுவது சரி என்று வேடிக்கையாகச் சாதிப்பார்கள். இது ஒரு விளையாட்டு; பந்தயத்தை ஒப்புக்கொண்டு ஒட முயல்கின்றவனே ஏமாற்றுகிற விளையாட்டு.