பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் குதிரையானது கொம்பிலையே கொம்பு இல்லாதது; தீனி தின்னும் தனக்கு வைக்கும் தீனியைத் தின்பது கொண்டதன் மேல் வெட்டுதலால் - வீரர்கள் அதன்மேல் ஏறிக்கொண்டு சென்று மாற்றாரை வெட்டி அழிக்க உதவியாயிருப்பது; அம்புவியில்நல் நடையது - அழகிய உலகிலே நல்ல கதியை உடையது; ஆதலால், இவை இரண்டும் சமம் என்க. சுதி வேகம் துப்பாக்கிக்கும் ஒலைச் சுருளுக்கும் ஆணி வரையுறலா லானகுறிப் பேதரலால் தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் - நீணிலத்தில் செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில் துப்பாக்கி யோலைச் சுருள். (66) நீள் நிலத்தில்: நெடிதான இந்த உலகத்திலே, செப்பார்க்கு உதவா தன்னைப் போற்றிச் சொல்லாத புலவர்க்குப் பயன்படுதல் இல்லாத, திருமலைராயன்வரையில் - திருமலைராயன் என்பவ னின் மலைச்சாரலில், துப்பாக்கி ஒலைச் சுருள் - துப்பாக்கியும் ஒலைச்சுருளும் ஒன்றற்கொன்று சமானமாகும். எங்ங்னமெனில், துப்பாக்கியானது. ஆணி வரையுறலால் இருப்புச் சலாகையைத் தன்பாற் கொண்டிருத்தலாலும், ஆன குறிப்பே தரலால் மேற்கொண்ட குறியினையே தாக்கி வெற்றி தருத லாலும், தோன கருமருந்தைத் தோய்ந்திடலால் மிகுதியான கருமருந் தினைப் பொருந்தியதாக இருப்பதனாலும், ஒலைச் சுருளானது. ஆணிவரை உறலால் - எழுத்தாணி கொண்டு எழுதப்படுதலை உடையதாதலாலும், ஆன குறிப்பே தரலால் தன்னிடத்தே எழுதப்பட்டதாகிய குறிப்பைப் பெறுவோனுக்குத் தருகின்றதனாலும், தோன கருமருந்து தோய்ந்திடலால் தன்னிடத்தே எழுதப்பட்டவை நன்கு புலனாகு மாறு கைக்காப்புச் செய்யப் பெறுதலை உடையதாதலாலும் ஆம் வானவில் விஷ்ணு வெற்றிலை நீரி லுளதா னிறம்பச்சை யாற்றிருவால் பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப் பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான வில்விண்டு நேர்வெற் றிலை. (67) பெரு வானவில் விண்டு வெற்றிலை நேர் பாரீர் - பெரிதான வானவில்லும் விட்டுணுவும் வெற்றிலையும் தம்முள் சமமா யிருப்பதனைக் காணுங்கள், எங்ங்னமெனில், வானவில்லானது: நீரில் உளதால் நீரினிடத்தேயிருந்து உளதானபடியினாலும், நிறம் பச்சயால் - நிறத்திலே பசுமை